Monday, December 24, 2007

"என் ராசாவின் மனசிலே...."கண்ணீர்த் துளிகளால் ஒரு கைவிலங்கு

கதாநாயகன் உலகெங்கும் தேடினாலும் கிடைக்காத உத்தமனாகவே இருக்கட்டும். முறைப்பெண்ணானாலும் விருப்பமில்லையெனில் நிர்ப்பந்தப்படுத்திக் கட்டிவைப்பது என்ன நியாயம்? "வேற எவனாவது பரிசம் போட்டுறுவானா? பொண்ணத் தூக்கிட்டே போயிருவான் என் மகன்" என்று சவால் விடுகிறாள் கிழவி. முறைமாமன் வேறு பெண்ணுக்குப் பரிசம் போட்டால் முறைப் பெண் மாமனைக் கடத்திக் கொண்டு போகலாமா?
..
இப்படியொரு கேள்வியே கேட்க முடியாதபடி கிழவி வாய்திறக்கும் போதெல்லாம் தத்துவமாய்க் கொட்டுகிறது. 'ஒரு பொண்டாட்டி புருசன்கிட்ட என்ன எதிர்பாக்குறா தெரியுமா? எச்சில் சோறும் ஒரு முழம் பூவும்தான்" - இது மகனுக்குச் சொல்லும் உபதேசம். 'எப்பேர்ப்பட்ட முரடனா இருந்தா என்னடீ. பொஞ்சாதி முந்தானையை மிஞ்சுனவன் எவனுமில்ல" இது மருமகளுக்கு.
புகுந்த வீட்டில் கணவனின் அடிமை, படுக்கையறையில் தாசி எனும் 'நீதி'யை நினைவூட்டும் வரிகள்.

..
முழுவிமர்சனமும் கீழே இணைக்கப்பட்டு உள்ளது
*******************************************************************