Thursday, December 20, 2007

ஹேராம் கதையா? வரலாறா?


வரலாற்றையும் கதையையும் இணைக்கும் விதிக்கு ஒரு விளக்கம் சொன்னார் எழுத்தாளர் சுஜாதா."காந்தியை சுட்டது கோட்சே தான். அது வரலாறு.கமலாஹாசன் சுட முடியாதே" என்றார்.


காந்தியை கோட்சே சுட்டது வரலாறல்ல. வரலாற்றால் ஒரு சம்பவம்.அவ்வளவுதான். கோட்சே இல்லையின்றால் அவனது குருநாதன் நீட்சே சுட்டு இருப்பான். ஆனால் அந்த சம்பவத்துக்கு இட்டு சென்ற அரசியல் சமூக நிகழ்ச்சி போக்கு இருக்கிறதே - அதுதான் வரலாறு. சகேத்ராமனின் கதை அந்த வரலாற்றை பிரதிபலிக்கவில்லை.


இத்தனையும் மீறி இந்தப் படத்தின் அழகியல் உங்களை மயக்குகிறது என்றால் அதற்காக நீங்கள் கூச்சப்படவேண்டியதில்லை.மயக்கம் தெளிவிக்கும் மருந்து அரசியல் கூர்மையும், வர்க்க உணர்வும்தான்.


என்னுடைய அழகியலை உன்னுடைய அரசியலால் விமர்சிக்காதே, என்று கூறும் கலை ஆராதர்கள் " உன்னுடைய கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று கேட்காதே" எனப் பதில் சொல்லலாம். உன்னுடைய கவிதை சாகேதராமனின் பெரியம்மாள் செத்ததைப் பற்றிதாக இருந்தால் சரி; அது நம்முடைய தேசத்தின் மரணத்தைப் பற்றியதல்லவா?


இந்தக் கேள்வியை எதிர்பார்த்து, தந்திரமாக முதல் காட்சியிலேயே இதற்கு மடையடைத்து விட்டார் கமலஹாசன். "எங்க தாத்தா எப்பவுமே ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார்னு கதை சொல்லமாட்டார். நான் இருந்த ஊர்ல ஒரு ராஜான்னுதான் சொல்லுவார்" என்கிறான் சாகேதராமனின் பேரன்.


'எக்ஸ்கியுஸ் மி ' என்று சொல்லிவிட்டு பிக்பாக்கெட் அடிக்க அனுமதிக்கலாமென்றால், "சாகேத்ராமன் வாழ்ந்த நாட்டில் ஒரு மதக்கலவரம்" என்று 'வரலாற்று கதை' சொல்லவதையும் அனுமதிக்கலாம்.


ஓமர் முக்தார் திரைப்படத்தின் கடைசிக் காட்சியிக் அவர் தூக்கிலிடப்பட்டவுடன் கீழே விழுந்த அவரது மூக்குக் கண்ணாடியைப் பத்திரப்படுத்துவான் ஒரு சிறுவன். அரங்கமே கண் கலங்கும்.


காந்தியின் கண்ணாடியையும் சாகேதராமன் எடுத்து கொள்கிறான். கண்ணாடிக்குரியவரின் வரலாறோ, எடுத்தவரின் கதையோ யாரையும் கண்கலங்க செய்யவில்லையே!

(விமர்சனத்திலிருந்து )


புதிய கலாச்சாரம் மார்ச் 2000 வந்த இதன் முழு விமர்சனமும் இணைக்கப் பட்டுள்ளது.
********************************************************************
http://i211.photobucket.com/albums/bb46/puthagapiriyan1/heyram-1.jpg
.
http://i211.photobucket.com/albums/bb46/puthagapiriyan1/heyram-2.jpg
.
http://i211.photobucket.com/albums/bb46/puthagapiriyan1/heyram-3.jpg
.
http://i211.photobucket.com/albums/bb46/puthagapiriyan1/heyram-4.jpg
.
http://i211.photobucket.com/albums/bb46/puthagapiriyan1/heyram-5.jpg
.
நன்றி: புதிய கலாச்சாரம்
******************************************

தொடர்புடைய பதிவுகள்
******************************************
காந்தி நல்லவரா? கெட்டவரா?
காந்தியசத்தைவிட கொடியதொரு இசம் எது? - மா. சிவகுமார்
அஹிம்ஸை - ஒரு அபாயகரமான அதி பயங்கர வன்முறையே!